Sunday, November 28, 2010

ரோபோக்களின் நகரம்

பெங்களூர் - கேள்வி பட்ட வரையில் தோட்ட நகரம் (garden city) என்றழைக்கப்பட்ட மென்பொருள் நகரினுள் நுழையும் வரை.அழகழகான வீடுகள், அதை விட அழகான தோட்டங்கள் வீட்டை சுற்றிலும். மிக பிரமாண்டமான வீடுகள், வீட்டின் வெளிப்புற கதவின் வேலைப்பாடே நம்மை வியக்க வைக்கும்.இவை எல்லாத்தையும் விட பெங்களூருவின் தட்ப வெப்ப நிலை சூப்பரோ சூப்பர்.

முதன்முதலில் கல்லூரிக்கு போகும் போது இருந்த ஆர்வம், பெங்களூருக்கு நுழையும் போதும். மெட்ரோ சிட்டி, கலர்புல் கட்டிடங்கள், pubs மற்றும் ஷாப்பிங் மால்ஸ், அதைவிட பெங்களூர் தக்காளி போலே figures :) இப்படி கனவுகளுடன் போனேன்.

போன முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை, அலுவலக வேலை அன்றே ஆரம்பித்து விட்டது. Office boy , Network Administrator , Release Engineer , Developer , Tech Lead இப்படி முதல் நாளே சனி ஆரம்பித்து விட்டது. ஒரு ஆர்வ கோளாறுலே நானும் குடுத்த கூலிக்கு மேலே கூவினேன்.அன்னைக்கே ஆக்கிட்டாங்க அடிமையா.. அதுமுதல் ஒரு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் freeya இல்லை. இதுலே மடிக்கணினி (Laptop) வேறே. வீட்டிலிருந்தே வேலை பார்க்கணுமாம். இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான்யா, நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்னு முடிவு பண்ணிட்டாங்க. விதி வலியது யாராலே மாத்த முடியும். நம்ம மூஞ்சிய பார்த்தாவே கண்டு பிடிச்சுடுவான்களோ?

இதெல்லாம் விட முக்கியமானது நாங்க தங்கி இருந்த guest house. ரொம்ப hi-fi யா, நீச்சல் குளத்துடன் இருந்த அடுக்கு மாடி குடியிருப்பு. ஒரு 300, 400 அடுக்கு மாடி வீடுகள் இருக்கும். நான் இருந்த ஆறு மாதங்களில் எனக்கு தெரிஞ்சு பக்கத்துக்கு வீட்டில் கூட யாரையும் பார்த்தது இல்ல. எல்லாம் இயந்திர மயமாய் இருந்தது. அட சூரிய அஸ்தமனத்தையே ஒரே முறை தான் பார்த்திருந்தேன். அதயே அதிசயமா புகைப்படம் எடுத்து வைத்தேனா பார்த்துக்கோங்களே. எல்லாரும் மனிதர்களா இல்லை இயந்திரமா(Robot)னே சந்தேகம் வந்துட்டது.

ஒரு வாரம் முழுவதும் அலுவலக வேலை, நேரம் காலம் தெரியாமல் நடுநிசி வரை. வாரக்கடைசியில் பார்க், சினிமா, உணவு விடுதியில் டின்னர். இதுதான் வாழ்கையா? ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கை. ஒருவருக்கொருவர் பேசக்கூட நேரம் கிடைப்பதில்லை. குழந்தைகள் விளையாட்டு கூட fixed timeline தான். குழந்தைகள் பேச ஆரம்பித்த உடனே நர்சரி ஸ்கூலில் விட்டு விட்டு, வேலைக்கு சென்றுவிடுகின்றனர். அதுவும் இன்று பெருகி வரும் தனிக்குடித்தன வாழ்க்கையில் சராசரியாக வேலைக்கு செல்லும் கணவன், மனைவி ஒன்றாக செலவிடும் நேரம் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே. அதிலும் பெங்களுர்வாசிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். 24 மணி நேரமும் தூங்கா நகரம். எந்த நேரமும் போக்குவரத்து வசதிகள் நிரம்பிய சாலைகள். Anytime we can get Cab service. அவர்களும் கேப்ல கெடா வேட்டரவங்க தான். பணம் பண்ணும் வித்தை பெங்களூர் வாசிகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. பணம் மட்டுமே வாழ்க்கை என்று எண்ணுகிறார்கள். நானும் அந்த ரோபோக்களில் ஒருவனாக மாறிப்போனேன். அவர்களிடம் இருந்து கொஞ்சம் அந்த வித்தையையும் கற்றுக்கொண்டேன்.

நானும் அந்த ரோபோ கூட்டத்திடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரோபோவாக மாறிக்கொண்டிருந்தேன். எல்லா எந்திரத்திற்கும் ஆயுத பூஜை அன்று விடுமுறை உண்டு. ஆனால் இந்த மனித ரோபோவுக்கு அன்று தான் overtime. ஒரு நாள் என் மனித மூளை சிந்திக்க தொடங்கியது. எப்படியாவது அந்த ரோபோக்களின் நகரில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று, அந்த நாளும் வந்தது. அப்பாடா தப்பித்தாகி விட்டது என்று நினைத்த போது இன்னொரு மாறிக்கொண்டிருக்கும் நகரில் வந்து சேர்ந்தேன். ஏற்கனவே ரோபோவான எனக்கு இது புதிதாக தோன்ற வில்லை. ஆனால்

"எந்திரனையும் மனிதனாக்கியது காதல்
ஆனால் இந்த ரோபோ கன்னியையும் கணினி ஆக்கியது"

-மனிதனாக மாற முயற்சிக்கும் ஒரு எந்திரன்.