Tuesday, July 27, 2010

கல்யாணம்

கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான்..இப்பதாண்டா எதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது..

வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது...பொண்டாட்டி முன்னாடி இப்படி சொல்லிட்டு,அவங்க Kitchen உள்ள போனவுடனே , கையெடுத்து கும்புட்டு தயவு செஞ்சு அந்த தப்ப மட்டும் பண்ணிமாட்டிக்காத மச்சின்னு கெஞ்சற நண்பன்....


எவ்ளோ நிம்மதியா இருந்தேன்..கல்யாணத்த பண்ணி வெச்சு என்ன என் புருசனுக்கு அடிமையாக்கிட்டாங்க.என் தோழி ஒருத்தி...


தம்பி அடுத்த வருஷம் ஜூன் குள்ள கல்யாணத்த முடிசிரனும்டா..நல்ல பொண்ணு
கிடைச்சுதுன்னா விட்ற கூடாது.....என் அம்மா..



டேய் கல்யாணத்துக்கு நெறைய செலவாகும்..வழக்கம் போல
பெருந்தன்மையா நீங்களே பார்துகங்கப்பானு சொல்லிட்டு போய்டாத...
மரியாதையா காச சேர்த்து வை...என் அப்பா..



சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா...காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ்
போடலாம்னு நானும் ரெண்டு வருசமா வெயிட் பன்றேனு.... சொல்லிட்டு ...மூதேவி..இதுவும் பண்ணிக்கமட்டேன்குது.எனக்கும் பண்ணி வெக்க மாட்டேன்குதுன்னு மனசுக்குள்ள முனுமுனுக்கற என் தங்கச்சி...



கல்யாணம்லாம் சும்மா பிரதர்...வெத்து மேட்டரு...ஒன்னும் இல்ல அதுல...பார்ல சிகரட் ஓசி வாங்குன கடனுக்கு அட்வைஸ் பண்ண வஸ்தாது ஒருத்தர்.



கல்யாணம்..கல்யாணம்...கல்யாணம் .....



25 27 வது வயசுல ஒரு பிரம்மச்சாரியை லேசா பயமுறுத்தி அதிகமா பதட்டபடுத்தி கொஞ்சமா ஷாக் அடிக்க வைக்கற ஒரு வார்த்த... அப்டி என்னதாங்க இருக்கு இந்த கல்யாணத்துல....



முதல் 3 மாதம்... திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு ...பொண்டாட்டிங்க்ற பேர்ல உங்க வீட்டுகுள்ள வருவா...பின்னாடி ஒரு கூட்டமே வந்து விட்டுட்டு போகும்....


பீரோகுள்ள உங்க துணிய நகர்த்தி வெச்சுட்டு அவங்க துணிய அடுகிக்குவாங்க‌...உங்க பாத்ரூம்ல அவங்க சோப்பும் ப்ரச்சும் எடத்த புடிச்சுக்கும்...அடுத்த நாள் ஆபீஸ் போகும்போது சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்கன்னு குழைஞ்சு குழைஞ்சு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே சொல்லுவாங்க‌...ஊர்ல டம்மி பிகர் கூட மதிக்காத நம்மள இந்த புள்ளைக்கு இவ்ளோ புடிசிருகேன்னு நம்மளும் வழிஞ்சுகிட்டே சீக்கிரம் வர ஆரம்பிப்போம்... (இது அடிமையாகுதலின் முதல் கட்டம்...)



அப்பறம் உங்கள அடிமையாக்கரதுக்கு,உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல நடக்கும்...
(அவங்க கூட படிச்ச வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு ஐடியா குடுப்பாங்க‌...)



மற்றொரு அழகான மாலை பொழுதுல புது பொண்டாட்டிய ஷாப்பிங்
கூட்டிட்டு போவீங்க...அவங்க 3 வருசமா வாங்க நெனச்சு வாங்காம இருந்த
எல்லாத்தையும் அப்பதான் வாங்குவாங்க‌....

அவங்க வாங்கற நெய்ல் பாளிஷ்க்கும் பாடி ஸ்ப்ரேக்கும் நீங்க தெண்டம் அழுகனும்... கான்டாதான் இருக்கும்...என்ன பண்றது...

அவங்களோட .ஒவ்வொரு சினுங்களுக்கும் கிரெடிட் கார்ட்
கிழிய கிழிய தேய் தேய்னு தேய்ப்போம்...பில்லு எகிர்றது பார்த்து மனசு
பதர்னாலும் உதடு வேற என்ன வேணும் என் செல்லகுட்டிக்குன்னு கேக்கும்.


வீட்டுக்கு விருந்தாளிங்க்ற பேர்ல வந்து டேரா போன்ற அவங்கப்பன்
விருமாண்டி கிட்ட கூட பாசமா நடந்துகுவோம்...(எல்லாம் நடிப்புதேன்..
எந்த ஊர்ல மாப்பிள்ளைக்கு அவன் மாமனார புடிச்சிருக்கு...)கொஞ்சம்
கொஞ்சமா நீங்க நீ யாயிட்டு வருவீங்க...



ஆறு மாசம் ஓடிடும்...

அதுக்கப்றம் எங்க ஒய் இருக்கு உமக்கு வாழ்க்கை...அடிமை ஒய் நீரு...



பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய கதையடிச்சிட்டு பேசுற‌ சுகம்
அதுக்கப்றம் கனவாவே போய்டும்....எங்க போறோம்,எதுக்கு போறோம்னு தெரியாம எங்கெங்கயோ போன தருணங்கள் மனசுக்குள்ள வெறும் நினைவுகளா மட்டுமே இருக்கும்...எந்த பொண்ண பார்த்தாலும் நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளோ,அப்டி இருப்பாளோங்கற அந்த curiosity சுத்தமா இருக்காது...செகண்ட் ஷோ சினிமா கட் ஆகும்...குஷி ஆனா அடிக்கற பீர் ,தம்[எப்போவாவது] கட் ஆகும்....நிம்மதியா செலவு பண்ற சுதந்திரம் கட் ஆகும்....

என்ன கொடும சார் இது....

இதுக்குதான் இந்த கருமம் புடிச்ச கல்யாணத்த வேண்டாம்ன்னு சொல்லுறேன்...


வாழ்க்கைல சந்தோஷமான தருணம் bachelorlife மட்டும்தான்னு எனக்கு தோனுது..


நீங்க என்ன நெனைக்கறீங்க...

இப்படிக்கு bachelor life ஐ ரசித்து ருசித்து
என்ஜாய் பண்ணிகொண்டிருக்கும்...
ஒரு சுதந்திர மனிதன்

Wednesday, July 7, 2010

மீசை



மீசைன்னு சொன்னாலே எனக்கு ஞாபகம் வருவது பாரதியார் தான். எல்லாருக்கும் சின்ன வயசுல முதல் ஹீரோ அப்பாதான். எனக்கும் அப்படிதான் இருந்தது. ஆனா எங்க அப்பாவுக்கு அவ்ளோ பெரிய மீசையெல்லாம் இல்ல. இருந்தாலும் அவர் ஆல் டைம் ஹீரோ தான், என்னையும் இவ்ளோ பெரிய ஆளா ஆக்கிருக்காரே :).

நான் பள்ளிக்கு போய் பாரதியாரின் "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே, உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே" னு படித்த போது, முண்டாசு கவிஞர் எனக்கு ஹீரோவா தெரிஞ்சார். அது மட்டுமில்லை அவருடைய மீசையும் எனக்கு பிடித்திருந்தது ஒரு காரணம். சாதாரணமா மீசை கீழ் நோக்கி தான் போகும். ஆனா பாரதிக்கு வில்லைப்போல வளைந்து மேல் நோக்கி இருக்கும். அதுவே ஒரு அழகு தான்.

நான் பெரியவனா ஆகி மீசை வச்சா பாரதி மாதிரி தான் வெக்கணும்னு முடிவே பண்ணி இல்லாத மீசையை தடவி பார்த்துக்குவேன். அப்புறம் ஒரு பத்தாவது படிக்கும் போது பகத்சிங் எனக்கு ஹீரோவா தெரிஞ்சார். அவர் மீசையும் அப்படியே வில்லைப்போல் மேல் நோக்கி இருக்கும். ஆனா பாரதி கூட கம்பேர் பண்ணும்போது சின்ன மீசை தான். எனக்கு தெரிஞ்சு ரியலா யாருக்குமே மீசை மேல் நோக்கி இருந்ததில்லை.

நான் சின்ன வயசுலே இருந்து மரியாதையை குடுக்கற ஒருத்தர் எங்க மாமா. அம்மாவோட பெரிய தம்பி. எங்க சொந்தத்திலேயே white காலர் ஜாப் முதல் முதலில் போனது அவர்தான். எனக்கு கணிப்பொறியை அறிமுகப்படுத்தி அதில் ஈடுபாடு கொண்டு வந்தவரும் அவர்தான். என் கை பிடித்து சுட்டுவானை (mouse) பழக்கி விட்டதும் அவர்தான் (ரோல் மாடல்). அவரும் மீசை பெருசா வச்சிருப்பார். அதனாலோ என்னமோ அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா இப்போ contact இல்ல. :( ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்.

என் கெட்ட நேரம் நான் +2 படிக்கும் வரைக்கும் எனக்கு மீசை வரவே இல்லை. எங்க அண்ணனுக்கு எல்லாம் பத்தாவதிலேயே வந்திருச்சு. அப்போதிருந்து கொஞ்சம் பெரிய மீசை வச்சிருக்கரவங்களைப் பார்த்தா பொறாமையா இருக்கும். ஆள் இருப்பானுங்க அரை கிலோ ஆனா மீசையும் தாடியும் ஒரு கிலோ இருக்கும். அப்ப எல்லாம் கடவுளே இது உனக்கே நியாயமானு கேப்பேன்.

அட கொஞ்ச நாள் போச்சுனா வந்திரும், பாரதி மாதிரி பெருசா வளத்திரலாம்னு கனவு கண்டிருந்தேன். என் பொறுமைக்கும் ஒரு அளவிருந்தது. காலேஜ் முடிக்கற வரைக்கும் கூட வரலை. இந்த கடுப்புக்கு நடுவுல எல்லாரும் என் தங்கச்சியை எனக்கு அக்கானு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

உடம்புனா வெயிட் ஏத்தலாம் குறைக்கலாம். இந்த மீசை வளர என்ன பண்ணுறது!!!.
விதியேனு விட்டுட்டேன். ஒரு வழியா PG படிக்கும் போது அண்ணாச்சி(மீசை) கண்ணுக்கு தெரியற மாதிரி வந்தது. அடிக்கடி தடவி பார்த்துக்குவேன் பாரதி மாதிரி வரணும்னு.

அட!!! மீசை தான் இப்படினா தாடி அதுக்கு மேல. இருந்ததே நாலு முடி. அதுலயும் ரெண்டு முடியை என் தங்கச்சி இழுத்து விட்டுட்டா. ரொம்ப வருஷம் கழித்து ஆட்டு தாடி மாதிரி ஒண்ணு வந்திருக்கு.

நான் லவ் பண்ண கூடாதுன்னு ஒரு ஐடியால இருக்கேன். ஏன்னு காரணம் தெரியணுமா? ஒருவேளை லவ் பண்ணி தோத்துபோனா தாடி வளர்க்கணும். நமக்குதான் வளராதே!!! (பொல்லாதவன் தனுஷ் பாணில சொல்லனும்னா பிகர் மடங்காததுக்கு இப்படி ஒரு மொக்கை reasona னு நீங்க நெனைக்கறது தெரியறது)

உலகையே பயமுறுத்திய ஹிட்லரின் அடையாளமும் மீசை தான். உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் அடையாளமும் மீசை தான்.

தமிழ் நாட்டை பொருத்தவரைக்கும் மீசை வீரத்துக்கு அடையாளம். ஆனா உண்மையிலே வீரத்துக்கும் மீசைக்கும் சம்பந்தம் இல்லன்னு சுஜாதா (famous writter) எழுதின அறிவியல் கட்டுரையில் படிச்சிருக்கேன். அந்த காலத்துல எல்லாம் பொண்ணுங்க பெருசா மீசை வெச்சா தான் கல்யாணம் பண்ணிக்குவாங்க. ஆனா இப்போ இருக்கற பொண்ணுங்க மீசைய trim பண்ணுனா தான் சைட் அடிக்கறாங்க.

என்னமோ மீசை தாடி வளர்றது ஹோர்மோன் செய்யிற வேலை. இப்போவும் விருமாண்டி கமல் மீசை, அஜித் தாடி பார்த்தா பொறாமையா தான் இருக்கும். ஹ்ம்ம் என்ன பண்ணுறது...

ஆம்லேட்

ஆம்லேட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி


என்னம்மா இத்தனை தொட்டுக்க இருக்கும் பொழுது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லேட் போட்டுக்கிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார் எவ்வளோதான் நீ செய்வாய் வா சேர்ந்து சாப்பிடலாம்!

இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆmலேட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க அதுவும் சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்று சொல்வீங்க அதுக்குதான்.

இப்படி சொன்னா கல்யாணம் ஆகி ஆறுமாதம் என்று அர்த்தம்!!!

**********************

என்னம்மா இன்னைக்கு ஸ்பெசல்!

சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு ஆம்லேட் தொட்டுக்க!

அவ்வளோதானா?

முடியலைங்க!


இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!


**************************

என்னம்மா சாப்பிடலாமா?

இருங்க இந்த சீரியல் முடியட்டும். என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உறிச்சு தாங்களேன் ஆம்லேட் போடுறேன்.

இது கல்யாணம் ஆகி ஒன்றரை வருடம் ஆனதுங்க!


********************************
என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லேட் போட்டு இருக்க எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்லே!

ஒரு நாள் இதை சாப்பிட்டாதான் என்னா? எல்லாத்தையும் நானே செய்யனுமா?


இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!


*******************************

என்னம்மா இது இத்தனோன்டு இருக்கு, முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே உடைச்சு புல் பாயிலா ஊத்தி இருக்க?


முட்டை என்னா நானா போடுறேன் கோழி போட்டது சின்னதா இருக்கு அதுக்கு நான் என்னா செய்ய! சும்மா குறை சொல்லிக்கிட்டு இருக்காம, தொட்டுக்கிட்டு சாப்பிடுங்க!


இது ஒரு மூன்று வருடம் ஆனது!

***********************************

என்னா இது ஆப் பாயில் போட்டு இருக்க நான் இத சாப்பிடவே மாட்டேன் என்று தெரியும்ல!

ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போய்டாது, சாப்பிடுங்க ஊருல இல்லாத அதிசய புருசன் எனக்குன்னு வந்து வாச்சி இருக்கு! இது ஒரு 4ல் இருந்து 5 வருடம் ஆன ஜோடிங்க!


******************************

என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

சாதம் வைத்து இருக்கேன், பிரிஞ்சில் நேற்று வாங்கிய மோர் இருக்கு, முட்டையும் இருக்கு ஆம்லேட் போட்டு சாப்பிடுங்க!

இது ஒரு 7 வருடம் ஆனதுங்க!


*******************************

என்னம்மா இன்னை என்ன சமையல் செய்யனும்!

அதையும் நான் தான் சொல்லனுமா? எனக்கு என்னா பிடிக்கும் என்று தெரியாதா? அதை செய்யுங்க!


இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!!!

********************************

இதில் கவனிச்சீங்கன்னா அவன் என்னம்மா என்று சொல்லுவது மற்றும் மாறவே இல்லை: