Thursday, June 3, 2010

மழைச்சாரல்

மழைதூறளில் மோட்டார் வண்டியில் செல்வதே ஒரு சுகமான அனுபவம். அதுவும் சென்னையில் வெய்யில் காலத்தில் மழை பெய்வது ஆனந்தத்திலும் ஆனந்தம். சாதாரணமா சந்தோசமா இருந்தா வண்டியை வேகமாக ஓட்டுவேன். குஷியாக இருந்தா இரண்டு கைகளையும் விட்டு சிறிது தூரம் ஓட்டுவேன். அன்றும் அப்படித்தான் ரொம்ப குஷியாக இருந்ததால் கைகளை விட்டு ஓட்டினேன். அந்த சந்தோசம் நிலைக்கவில்லை. அடுத்த நாளே அடைமழை பெய்தது. லைலா வந்தாலும் சாலையெல்லாம் வெள்ளம் (ஜொள்ளு), லைலா புயல் வந்தாலும் சாலையெல்லாம் வெள்ளம் :).

மோட்டார் வண்டியில் நெடுந்தூர பயணம் என்றாலே ஒரு மகிழ்ச்சியான பயணம் நினைவுக்கு வருகிறது. ஒரு முறை சென்னைலிருந்து பெங்களூர் வரை இரு சக்கர வண்டியில் அதுவும் லேசான மழை தூரலில் சென்றேன். 360 KM தனிமையான பயணம் அது, ஜெயம் ரவி பாவனாவை தேடி சென்றது போல அல்ல அது. வேலை நிமித்தமாக சென்று கொண்டிருந்தேன். ஆளில்லாத, போக்குவரத்து நெரிசல் இல்லாத நான்கு வழி பாதையில் நான் மட்டும்.பொதுவாக நெடுந்தூர பயணம் என்றால் வழி நெடுக வண்டியை நிறுத்தி ஏதாவது சாப்பிட தோணும் ஆனால் ஏனோ அன்று வண்டியை நிறுத்த தோணவில்லை.
அன்று ஒரு நாள் மட்டும் எல்லாமே அழகாக தெரிந்தது பெங்களூர் உள்பட. அடுத்து வந்த பெங்களூர் நாட்கள் அவ்வளவு இனிமையாக இல்லை.

No comments:

Post a Comment