
மீசைன்னு சொன்னாலே எனக்கு ஞாபகம் வருவது பாரதியார் தான். எல்லாருக்கும் சின்ன வயசுல முதல் ஹீரோ அப்பாதான். எனக்கும் அப்படிதான் இருந்தது. ஆனா எங்க அப்பாவுக்கு அவ்ளோ பெரிய மீசையெல்லாம் இல்ல. இருந்தாலும் அவர் ஆல் டைம் ஹீரோ தான், என்னையும் இவ்ளோ பெரிய ஆளா ஆக்கிருக்காரே :).
நான் பள்ளிக்கு போய் பாரதியாரின் "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே, உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே" னு படித்த போது, முண்டாசு கவிஞர் எனக்கு ஹீரோவா தெரிஞ்சார். அது மட்டுமில்லை அவருடைய மீசையும் எனக்கு பிடித்திருந்தது ஒரு காரணம். சாதாரணமா மீசை கீழ் நோக்கி தான் போகும். ஆனா பாரதிக்கு வில்லைப்போல வளைந்து மேல் நோக்கி இருக்கும். அதுவே ஒரு அழகு தான்.
நான் பெரியவனா ஆகி மீசை வச்சா பாரதி மாதிரி தான் வெக்கணும்னு முடிவே பண்ணி இல்லாத மீசையை தடவி பார்த்துக்குவேன். அப்புறம் ஒரு பத்தாவது படிக்கும் போது பகத்சிங் எனக்கு ஹீரோவா தெரிஞ்சார். அவர் மீசையும் அப்படியே வில்லைப்போல் மேல் நோக்கி இருக்கும். ஆனா பாரதி கூட கம்பேர் பண்ணும்போது சின்ன மீசை தான். எனக்கு தெரிஞ்சு ரியலா யாருக்குமே மீசை மேல் நோக்கி இருந்ததில்லை.
நான் சின்ன வயசுலே இருந்து மரியாதையை குடுக்கற ஒருத்தர் எங்க மாமா. அம்மாவோட பெரிய தம்பி. எங்க சொந்தத்திலேயே white காலர் ஜாப் முதல் முதலில் போனது அவர்தான். எனக்கு கணிப்பொறியை அறிமுகப்படுத்தி அதில் ஈடுபாடு கொண்டு வந்தவரும் அவர்தான். என் கை பிடித்து சுட்டுவானை (mouse) பழக்கி விட்டதும் அவர்தான் (ரோல் மாடல்). அவரும் மீசை பெருசா வச்சிருப்பார். அதனாலோ என்னமோ அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா இப்போ contact இல்ல. :( ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்.
என் கெட்ட நேரம் நான் +2 படிக்கும் வரைக்கும் எனக்கு மீசை வரவே இல்லை. எங்க அண்ணனுக்கு எல்லாம் பத்தாவதிலேயே வந்திருச்சு. அப்போதிருந்து கொஞ்சம் பெரிய மீசை வச்சிருக்கரவங்களைப் பார்த்தா பொறாமையா இருக்கும். ஆள் இருப்பானுங்க அரை கிலோ ஆனா மீசையும் தாடியும் ஒரு கிலோ இருக்கும். அப்ப எல்லாம் கடவுளே இது உனக்கே நியாயமானு கேப்பேன்.
அட கொஞ்ச நாள் போச்சுனா வந்திரும், பாரதி மாதிரி பெருசா வளத்திரலாம்னு கனவு கண்டிருந்தேன். என் பொறுமைக்கும் ஒரு அளவிருந்தது. காலேஜ் முடிக்கற வரைக்கும் கூட வரலை. இந்த கடுப்புக்கு நடுவுல எல்லாரும் என் தங்கச்சியை எனக்கு அக்கானு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.
உடம்புனா வெயிட் ஏத்தலாம் குறைக்கலாம். இந்த மீசை வளர என்ன பண்ணுறது!!!.
விதியேனு விட்டுட்டேன். ஒரு வழியா PG படிக்கும் போது அண்ணாச்சி(மீசை) கண்ணுக்கு தெரியற மாதிரி வந்தது. அடிக்கடி தடவி பார்த்துக்குவேன் பாரதி மாதிரி வரணும்னு.
அட!!! மீசை தான் இப்படினா தாடி அதுக்கு மேல. இருந்ததே நாலு முடி. அதுலயும் ரெண்டு முடியை என் தங்கச்சி இழுத்து விட்டுட்டா. ரொம்ப வருஷம் கழித்து ஆட்டு தாடி மாதிரி ஒண்ணு வந்திருக்கு.
நான் லவ் பண்ண கூடாதுன்னு ஒரு ஐடியால இருக்கேன். ஏன்னு காரணம் தெரியணுமா? ஒருவேளை லவ் பண்ணி தோத்துபோனா தாடி வளர்க்கணும். நமக்குதான் வளராதே!!! (பொல்லாதவன் தனுஷ் பாணில சொல்லனும்னா பிகர் மடங்காததுக்கு இப்படி ஒரு மொக்கை reasona னு நீங்க நெனைக்கறது தெரியறது)
உலகையே பயமுறுத்திய ஹிட்லரின் அடையாளமும் மீசை தான். உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் அடையாளமும் மீசை தான்.
தமிழ் நாட்டை பொருத்தவரைக்கும் மீசை வீரத்துக்கு அடையாளம். ஆனா உண்மையிலே வீரத்துக்கும் மீசைக்கும் சம்பந்தம் இல்லன்னு சுஜாதா (famous writter) எழுதின அறிவியல் கட்டுரையில் படிச்சிருக்கேன். அந்த காலத்துல எல்லாம் பொண்ணுங்க பெருசா மீசை வெச்சா தான் கல்யாணம் பண்ணிக்குவாங்க. ஆனா இப்போ இருக்கற பொண்ணுங்க மீசைய trim பண்ணுனா தான் சைட் அடிக்கறாங்க.
என்னமோ மீசை தாடி வளர்றது ஹோர்மோன் செய்யிற வேலை. இப்போவும் விருமாண்டி கமல் மீசை, அஜித் தாடி பார்த்தா பொறாமையா தான் இருக்கும். ஹ்ம்ம் என்ன பண்ணுறது...
No comments:
Post a Comment